Sunday, June 20, 2010

எவரெஸ்ட் சிகர உச்சியில் இங்கிலாந்து வீரர் சாவு


பெய்ஜிங், ஜூன். 4-
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் பீட்டர் கின்லோஜ். மலை ஏறும் வீரர். இவர் தனது குழுவினருடன் சீனப் பகுதியில்
இருந்து இமய மலையில் உள்ள உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறினார்.
கடந்த மாதம் 25-ந் தேதி இவர் சீன பகுதியில் இருந்து 29 ஆயிரத்து 95 அடி உயரத்தில் (8,800 மீட்டர்) உள்ள எவரெஸ்ட்
சிகரத்தில் ஏறினார். உடல் நலக்கோளாறு காரணமாக சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
ஆனால் அவரது உடலை கீழே எடுத்து வரமுடியாமல் மலை ஏறும் குழுவினர் அவதிப்படுகின்றனர். ஏனெ னில் அங்கு
போதுமான ஆக்ஜிஜன் இல்லை. மிக மோசமான தட்ப வெப்பம் நிலவுகிறது என்று சீன மலையேறுவோர் சங்க துணைத்
தலைவர் யங்பெங் தெரிவித்தார். இந்த ஆண்டில் மட்டும் சீன பகுதியில் இருந்து எவ ரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 4 பேர்
பரிதாபமாக இறந்துள்ளனர். அவர்களில் கின்-லோச் 4-வது நபர் ஆவார்.

நன்றி - மாலை மலர்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.